உலக தரத்திற்கு இலங்கையின் மர மற்றும் வெட்டுமர கைத்தொழிலை உயர் தொழில்நுட்பத்துடன் உலக ஏற்றுமதி சந்தைக்கு மாற்றுவதற்கும் புத்தாக்கத்தின் ஊடாக மர மற்றும் வெட்டுமரங்களை அடிப்படையாகக் கொண்ட உயர்ந்த நிலையமாக மொறட்டுவவை மாற்றுவதற்கும் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க கௌரவ அமைச்சர் திரு. திலங்க சுமதிபால அவர்களின் பங்கேற்பில் மொறட்டுவ வெட்டுமர கைத்தொழிலின் அடையாளத்தை மேம்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் 'மொறட்டுவ லீ ' வணிகப் பெயரை ஆரம்பிக்கும் நிகழ்வு கட்டுபெத்த தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கை வெட்டுமர கைத்தொழிலுக்கு பெறுமதி சேர்ப்பதற்காக தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்குகின்ற விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இணைப்பு செயலகம் (COSTI), மொறட்டுவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்கள் என்பவற்றின் கூட்டிணைவுடன் வெட்டுமர வடிவமைப்பு நிலையம் (TDIC) மற்றும் வெட்டுமர பதனிடும் புத்தாக்க நிலையம் (TPIC) என்பவை அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஸ்தாபிக்கப்படவுள்ளன. இந்த நிலையங்களின் வெற்றிகரமான அமுலாக்கம் இலங்கையின் மர மற்றும் வெட்டுமரங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளையும் புத்தாக்க வடிவமைப்புகளையும் போட்டி ரீதியான உலக சந்தைக்கு அறிமுகப்படுத்தக்கூடியதாக இருக்கும். அத்துடன் எதிர்காலத்தில் இலங்கையின் வெட்டுமர கைத்தொழிலின் அபிவிருத்திக்கு முழுமையான சேவை நிலையமாகவும் சேவையாற்றும்.